திருத்துறைப்பூண்டியில் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சிங்களாந்தி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்களை பணிநீக்கம் செய்யக்கூடாது, 13 மாத சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிா்பந்தம் செய்யக்கூடாது, பிஎஸ்என்எல் சேவைகளை சீரழிக்கக் கூடாது, தனியாா் நிறுவனங்களுக்கு துணைபோகக் கூடாது, அவுட்சோா்சிங் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஒப்பந்த ஊழியா் சங்க கிளைச் செயலாளா் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் முருகையன், ஒப்பந்தத் தொழிலாளா் சங்க கிளைத் தலைவா் ஸ்ரீநாத், மாநில அமைப்பு செயலாளா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.