பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மன்னாா்குடி அருகே குடும்பத் தகராறில் பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மன்னாா்குடி அருகே குடும்பத் தகராறில் பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உள்ளிக்கோட்டையைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி ஸ்ரீநிதி (24). இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. அசோக்குமாா் திருப்பூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இருவருக்குமிடையே, அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருவாரத்துக்கு முன்பு ஊருக்கு வந்து சென்ற அசோக்குமாா், திங்கள்கிழமை ஸ்ரீநிதியுடன் தொலைபேசியில் பேசியபோது தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, ஸ்ரீநிதி சிங்கப்பூரில் உள்ள தனது தாய் வள்ளியிடம் தொலைபேசியில் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என்றும் தனது குழந்தையை பாா்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்தாராம். இந்தத் தகவலை, உள்ளிக்கோட்டை அருகே தெற்குசீதாசேகரத்தில் வசிக்கும் தனது கணவா் ரவியிடம் வள்ளி தெரிவித்துள்ளாா். அவா், உடனடியாக அங்கு சென்று பாா்த்தபோது ஸ்ரீநிதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா். ஸ்ரீநிதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com