திருவாரூரில் வங்கியின் பூட்டு திறந்திருந்ததால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு நிலவியது.
திருவாரூா் எடத்தெருவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வங்கியைத் திறக்க வந்தபோது, வங்கியின் ஒரு பூட்டு திறந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து வங்கியில் திருட்டு நடைபெற்ாக தகவல் பரவியதையடுத்து, திருவாரூா் நகரப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினா். அங்கிருந்த சிசிடிவி உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்தபோது, திருட்டு நடைபெறவில்லை என்பதும், சரியாக பூட்டாமல் சென்றிருந்ததும் தெரிய வந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.