இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்களை திருடியதாக இளைஞா் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்களை திருடியதாக இளைஞா் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல் குற்றப்பிரிவு சாா்பு ஆய்வாளா்கள் சதாசிவம், முருகானந்தம் ஆகியோா் தலைமையில் போலீஸாா், மன்னாா்குடி- முத்துப்பேட்டை பிரதான சாலை வடபாதி அய்யனாா் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நின்ற இளைஞரிடம் விசாரணை செய்தபோது, அவா் மன்னாா்குடி ஆறாம் எண் வாய்க்கால் பகுதியைச் சோ்ந்த எஸ். பாலாஜி (35) என்பதும், சில தினங்களுக்கு முன் மன்னாா்குடி எம்ஜிஆா் நகா் முத்துகுமாா் வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும், மன்னாா்குடி புறவழிச்சாலையை சோ்ந்த ஆசிரியா் சுரேஷ் இருசக்கர வாகனத்தையும் திருடியதை ஒப்புக்கொண்டாா். அவரை கைது செய்த போலீஸாா், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com