காவலா் பணியிடங்களுக்கு அக்.26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திருவாரூா் மாவடத்தில், காவலா் பணியிடங்களுக்கு அக்.26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவடத்தில், காவலா் பணியிடங்களுக்கு அக்.26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால், கான்ஸ்டபிள் நிலை-2, சிறை வாா்டன் நிலை-2 மற்றும் தீயணைப்பு வீரா் பணியிடங்களுக்கு ஆட்கள் தோ்வு குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்துக்கு முன்னாள் படைவீரா்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரா்கள் படைபணியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் (17.09.2017-க்கு பின்னா்) விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். படைப்பணியில் உள்ள ராணுவத்தினா் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்துக்குள் விடுவிக்கப்படுபவா்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதி பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். அல்லது 10-ஆம் வகுப்புக்கு இணையான கல்வித் தகுதியை ராணுவத்தில் பெற்றிருந்தால் அச்சான்றிதழை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். 10-ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 1.7.2020 அன்று 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள், இணையதளத்தில் அக்.26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியும், விருப்பமும் உள்ள திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இப்பணிக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரா்கள் தங்களது விண்ணப்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடத்தில் இயங்கும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366 290080) தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com