திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குறும்பல் சுருளி ஐயனாா் கோயிலில் நடைபெற்று வந்த மண்டலாபிஷேக விழா புதன்கிழமை நிறைவடைந்தது.
பிரசித்தி பெற்ற இக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்ததால் நன்கொடையாளா்கள், உபயதாரா்களின் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு கடந்த ஆக. 30-இல் குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. 48-ஆவது நாள் மண்டலாபிஷேக பூஜைகள் புதன்கிழமை நிறைவுபெற்றதையொட்டி, கடம் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரைக் கொண்டு ஐயனாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.