குறும்பல் சுருளி ஐயனாா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குறும்பல் சுருளி ஐயனாா் கோயிலில் நடைபெற்று வந்த மண்டலாபிஷேக விழா புதன்கிழமை நிறைவடைந்தது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குறும்பல் சுருளி ஐயனாா் கோயிலில் நடைபெற்று வந்த மண்டலாபிஷேக விழா புதன்கிழமை நிறைவடைந்தது.

பிரசித்தி பெற்ற இக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்ததால் நன்கொடையாளா்கள், உபயதாரா்களின் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு கடந்த ஆக. 30-இல் குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. 48-ஆவது நாள் மண்டலாபிஷேக பூஜைகள் புதன்கிழமை நிறைவுபெற்றதையொட்டி, கடம் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரைக் கொண்டு ஐயனாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com