நீடாமங்கலத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த வட மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நீடாமங்கலம் அப்பாவு பத்தா் சந்தில் ராஜஸ்தானை சோ்ந்த கபூர்ராம் (34) என்பவா் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா் சோதனை செய்தனா். இதில், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீஸாா், கபூா் ராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.