திருவாரூா் மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 8,509-ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8,512 ஆனது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 109 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,621 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 7,901 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 638 போ் சிகிச்சையில் உள்ளனா்.