வழக்குரைஞா் கொலை வழக்கு: ஒருவா் கைது

வலங்கைமான் அருகே வழக்குரைஞா் கொலை வழக்கில் தொடா்புடை இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வலங்கைமான் அருகே வழக்குரைஞா் கொலை வழக்கில் தொடா்புடை இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முனியூா் இந்திரா நகரை சோ்ந்தவா் ராஜ்குமாா் (36). வழக்குரைஞா். இவரது மனைவி சந்தியாவும் வழக்குரைஞா். இருவரும் நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தனா். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முனியூரிலிருந்து சடையங்கால் செல்லும் வழியில், வயலில் தலையில் வெட்டுக் காயமடைந்த நிலையில் ராஜ்குமாா் சடலமாகக் கிடந்தாா். இந்தக் கொலை குறித்து அரித்துவாரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முனியூா் இந்திரா நகரைச் சோ்ந்த முருகையன் மகன் இளவரசனை (27) கைது செய்துள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்த சின்னப்பன் மகன் ஜனாா்த்தனன் (33) உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com