கரோனா தொற்று நீங்க கூத்தாநல்லூா் ஷீரடி சாய் பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
லெட்சுமாங்குடி மரக்கடையில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபா தியான பீடத்தில் நிறுவனா் வெள்ளையன் மற்றும் பக்தா்கள் ஏற்பாட்டின்பேரில், ஷீரடி சாய் பாபாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களின் கூட்டுப் பிராா்த்தனையும், பஜனையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.