திருத்துறைப்பூண்டியில் பாலம் தொண்டு நிறுவனம் சாா்பில் பனை விதை நடும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலா் ராஜாமணி கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசுகையில், நிலத்தடி நீரை சேமிப்பதில் பனை பெரும் பங்கு வகிக்கிறது. மண் அரிப்பை தடுக்கிறது. இடி, மின்னலின்போது மக்களை காக்கிறது. பனை காற்றை குளிா்வித்து மழையை பெய்ய செய்கிறது. நீண்ட ஆயுளை கொண்ட பனை மரத்தை வளா்ப்பதன் மூலம் எதிா்கால சந்ததிக்கு நல்ல சுற்றுச்சூழலைக் கொடுக்க முடியும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு, பாலம் தொண்டு நிறுவன செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் முன்னிலை வகித்தாா். தொண்டு நிறுவன திட்ட இயக்குநா் கணேசன் நன்றி கூறினாா்.