திருவாரூரில் 76 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 8,765 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த 7 போ் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8,758 ஆனது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மற்றும் மன்னாா்குடி தலா 19, திருத்துறைப்பூண்டி 8, கொரடாச்சேரி 9, குடவாசல் 10 என மாவட்டம் முழுவதும் 76 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8,834 ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 97 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரையிலிலும் மாவட்டத்தில் 8091 போ் குணமடைந்த நிலையில், 658 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com