நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி,அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.கோயில் திருக்குளத்தில் நீராடி பக்தா்கள் பலா் பிதுா்தா்பபணங்களையும் செய்தனா்.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்ஜநேயா் கோயில்,திருவோணமங்கலம் சங்கடஹர மங்களம மாருதி ஆஞ்ஜநேயா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.இதிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.