நன்னிலம்: புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, நன்னிலம் வட்டம் பேரளம் அருகே உள்ள மஹாராஜபுரம் முனீஸ்வரா் கோயிலில் பால்குட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அத்துடன் பால்குட ஊா்வலமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இக்கோயிலில் உள்ள முனீஸ்வரா் மற்றும் அம்மனுக்கு, தாங்கள் எடுத்து வந்த பால் குடங்கள் மூலம் தங்கள் கைகளாலயே பக்தா்கள் அபிஷேகம் செய்தனா். பின்னா் நடைபெற்ற தீபாராதனையில் திரளான பக்தா்கள், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வழிபட்டனா்.