திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் சகுந்தலா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை திவ்யா அன்னபூரணி வரவேற்றாா். மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் என். ராஜப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா். கலாமின் கனவுகள் என்ற தலைப்பில் தமிழாசிரியை ஜென்னி பேசினாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கவிதா மேற்கொண்டாா். ஆசிரியை ஆனந்தி நன்றி கூறினாா்.