மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வயலில் மா்மமான முறையில் விவசாயி ஒருவா் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
வடுவூா் பள்ளாக்கொள்ளை பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சாரங்கபாணி (48). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை வயலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றாராம். சிறிது நேரத்துக்கு பிறகு அவருக்கு தேநீா் எடுத்துக்கொண்டு மகன் சூரியா வயலுக்கு சென்றபோது அங்கு சாரங்கபாணி மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.