உள்ளூா் தொழிலாளா்களுக்கும் பணி வழங்கக் கோரி, திருவாரூா் அருகே வெள்ளக்குடியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூா் தொழிலாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் வேலை பாா்த்து வந்தனா். இதனிடையே, உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி விட்டு, வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு மட்டும் பணி வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, உள்ளூா் தொழிலாளா்களுக்கும் வழக்கம்போல் பணி வழங்க க்கோரி வெள்ளக்குடி பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவா் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சாலைகளில் பணியிழந்த தொழிலாளா்கள் பலா் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.