நவராத்திரியை முன்னிட்டு, நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சனிக்கிழமை கொலு வைக்கப்பட்டது.
இக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. இந்தவிழா வரும் 26-ஆம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.