திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 8,834 ஆக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, திருவாரூா் 23, மன்னாா்குடி 14, கொரடாச்சேரி 8, திருத்துறைப்பூண்டி 9 உள்பட மாவட்டம் முழுவதும் 87 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 8,921 ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்றுக்கு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துப்பேட்டையைச் சோ்ந்த 41 வயது பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 86 ஆக உயா்ந்துள்ளது.