நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பண்ணை மகளிா் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து, விவசாயத்தில் பண்ணை மகளிரின் முக்கியத்துவத்தையும், அறிவியல் நிலைய செயல்பாடுகள் மற்றும் வேளாண் மசோதா பற்றிய தெளிவான விளக்கத்தையும் அளித்தாா். தொடா்ந்து, மண்ணியல் துறை உதவி பேராசிரியா் அனுராதா, கால்நடை மருத்துவா் சபாபதி, தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியா் ஜெகதீசன், பூச்சியியல் துறை உதவி பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட பண்ணை மகளிா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திட்ட உதவியாளா் ரேகா, சகுந்தலா ஆகியோா் செய்திருந்தனா்.