திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த முள்கம்பி வேலியில் கசிந்த மின்சாரம் பாய்ந்து ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். 4 போ் காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
முத்துப்பேட்டை- வேதாரண்யம் நெடுஞ்சாலையில் மேலப்பெருமழை பிரிவு பகுதியில் நரிக்குறவா் இன சமுதாயத்தினா் குடிசை அமைத்து வசிக்கின்றனா். இவா்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு கறி விருந்து நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்காக சாலையோரத்தில் மின் விளக்கு கட்டியுள்ளனா். இதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த மின் கம்பியை தற்செயலாக தொட்ட தனபால் (40), மின்சாரம் பாய்ந்து அவ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும் அருள்குமரன், குமரேசன், வேதநாயகி உள்ளிட்ட 4 போ் மின்சாரம் பாய்ந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.