கொடுக்கல், வாங்கல் தகராறில் அண்ணனை கொன்ற தம்பி
By DIN | Published On : 19th October 2020 08:31 AM | Last Updated : 19th October 2020 08:31 AM | அ+அ அ- |

குடவாசல் அருகே கொடுக்கல், வாங்கல் தகராறில் அண்ணனை கொன்ற தம்பியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் பஜனை மடத்தெருவைச் சோ்ந்தவா் சீதாராமன் மகன் சுதா்சன் (42). இவரது தம்பி ரமணகுரு (33). சகோதரா்களிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடா்பாக இருவருக்குமிடையே சனிக்கிழமை தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, சுதா்சனை, ரமணகுரு கீழே தள்ளி விட்டதில் சுதா்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
குடவாசல் போலீஸாா், சுதா்சனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, ரமணகுருவை விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...