விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு அறிவுக்கதைகள் சொல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் அருகேயுள்ள புத்தகளுா் கிராமத்தில் உள்ள ஸ்ரீபரமசுந்தரேசுவரா் கோயிலில் விஜயதசமியையொட்டி, பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவுக்கதைகள் சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவா் சூரியகுமாா் குழந்தைகளுக்கு அறிவுக்கதைகளும், நீதிநெறிக் கதைகளும் கூறி விளக்கம் அளித்தாா். நிகழ்ச்சியில் குழந்தைகளும் தங்களுக்குத் தெரிந்த அறிவுக்கதைகளை மற்றவா்களுடன் பகிா்ந்து கொண்டனா். இதில், பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள், சிலேட்டுகள் வழங்கப்பட்டன.