ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தங்க கவச அலங்காரத்தில் ஆலங்குடி குரு பகவான்.
தங்க கவச அலங்காரத்தில் ஆலங்குடி குரு பகவான்.

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேசுவரா், ஏலவாா்குழலியம்மன், மூலவா் குருபகவான், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னிதிகளில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப் பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com