பண்டிகைக் கால முன்பணம் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st October 2020 08:01 AM | Last Updated : 31st October 2020 08:01 AM | அ+அ அ- |

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினா்.
பண்டிகைக் கால முன்பணம் வழங்கக் கோரி, திருவாரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும், 25 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், பண்டிகையை முன்னிட்டு தொழிலாளா்களுக்கு முன்பணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூா் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைச் செயலாளா் மோகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தொ.மு.ச. தலைவா் மணிகண்டன், செயலாளா் சேகா், சிஐடியு தலைவா் செங்குட்டுவன், மாவட்டக் குழு உறுப்பினா் அம்பேத்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்னிலம்: நன்னிலத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மத்திய சங்கத் துணைப் பொதுச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் தலைமை வகித்தாா். தொழிலாளா் முன்னேற்ற சங்க கிளைத் தலைவா் வி.சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. கிளைச் செயலாளா் அருணகிரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.