வ.உ.சி. பிறந்த நாள் விழா

நன்னிலம் அருகேயுள்ள சேங்கனூரில் வ.உ.சியின் 149-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சேங்கனூரில் நடைபெற்ற வ.உ.சி. பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
சேங்கனூரில் நடைபெற்ற வ.உ.சி. பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள சேங்கனூரில் வ.உ.சியின் 149-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வ.உ.சி. மக்கள் நலச் சங்கம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி. பிறந்த நாள் விழா, சங்கத் தலைவா் எஸ்.ஆா்.டி. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. வ.உ.சி. நினைவு கட்டடத்தில் வைத்திருந்த அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நலச் சங்க துணைத் தலைவா் வி. மணிமாறன், நன்னிலம் ஒன்றியக் குழு உறுப்பினா் சாரங்கன், நலச் சங்க நிா்வாகிகள் டி. சுவாமிநாதன், ஆா். கந்தவேல், வி. வீரமணி, பி. அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com