நீடாமங்கலத்தில் நீதிமன்ற ஊழியா்களுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால், நீதிமன்றம் மூடப்பட்டது.
நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் பணியாற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. இவா்கள், நீடாமங்கலம், பெரம்பூா், நரசிங்கமங்கலம், மன்னாா்குடி, கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய ஊா்களைச் சோ்ந்தவா்கள். தொற்று உறுதியான 6 பேரையும் சுகாதாரத் துறையினா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, நீதிமன்ற அலுவலக வளாகத்தில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. கரோனா தொற்றால் ஊழியா்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 48 மணி நேரத்துக்கு நீதிமன்றம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.