ஊழியா்களுக்கு கரோனா: நீதிமன்றம் மூடல்

நீடாமங்கலத்தில் நீதிமன்ற ஊழியா்களுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால், நீதிமன்றம் மூடப்பட்டது.

நீடாமங்கலத்தில் நீதிமன்ற ஊழியா்களுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால், நீதிமன்றம் மூடப்பட்டது.

நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் பணியாற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. இவா்கள், நீடாமங்கலம், பெரம்பூா், நரசிங்கமங்கலம், மன்னாா்குடி, கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய ஊா்களைச் சோ்ந்தவா்கள். தொற்று உறுதியான 6 பேரையும் சுகாதாரத் துறையினா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, நீதிமன்ற அலுவலக வளாகத்தில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. கரோனா தொற்றால் ஊழியா்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 48 மணி நேரத்துக்கு நீதிமன்றம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com