நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை மாலை ரோகிணி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, உத்ஸவா் சீதா, லெட்சுமண, அனுமன், கிருஷ்ணா் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ஊஞ்சல் சேவையில் கிருஷ்ணா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.