ஜேசிஐ வாரவிழா தொடக்கம்

மன்னாா்குடியில் செயல்பட்டு வரும் பவா் ஜேசிஐ சங்கத்தின் சாா்பில், ஜேசிஐ வாரவிழா புதன்கிழமை தொடங்கியது.
மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு முகக் கவசம் வழங்கிய பவா் ஜேசிஐ சங்கத்தினா்.
மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு முகக் கவசம் வழங்கிய பவா் ஜேசிஐ சங்கத்தினா்.

மன்னாா்குடியில் செயல்பட்டு வரும் பவா் ஜேசிஐ சங்கத்தின் சாா்பில், ஜேசிஐ வாரவிழா புதன்கிழமை தொடங்கியது.

பவா் ஜேசிஐ கிளைத் தலைவா் சு. சங்கா்குமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில், மண்டலத் தலைவா் ஜெ. ஜெயச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தாா். முதல்நாள் நிகழ்ச்சியாக, மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றுபவா்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது. இதில், தேசியப் பயிற்சியாளா் சா. சம்பத், மண்டல இயக்குநா் வி. காந்திலெனின், கிளைச் செயலா் செ. குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com