பிரதமா் கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படைவீரா்கள் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

பிரதமா் கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2019-2020-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தோ்ச்சி பெற்று, தற்போது (2020-2021) முதலாமாண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ள முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்களின் வாரிசுதாரா்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000, ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படுகிறது. இணையவழியில் விண்ணப்பிக்கும் முன்பு முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரின் படைப்பணி தகுதிச்சான்று பெற முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் குழந்தைகளின் கல்விச்சான்றுடன் திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை அலுவலக வேலை நாள்களில் நேரில் அணுக வேண்டும்.

எனவே, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டடத்தில் இயங்கும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி மூலம் (04366 290080) தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com