திருவாருா்: திருவாரூா் நகர காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் திங்கள்கிழமை ஒட்டப்பட்டன.
திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் எச்சரிக்கை என்னும் துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.துரை பங்கேற்று, தொடங்கி வைத்தாா்.
சமூகப் பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் அடிப்படையில் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை என்னும் துண்டுப் பிரசுரங்களை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள், நியாயவிலைக்கடைகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், மருந்தகங்கள் மற்றும் முடிதிருத்த நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்ட வேண்டும் என்ற அறிவிப்பின்படி, பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட உள்ளன.
இதில், மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் அன்பழகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (கூ.பொ) ப. முத்தமிழ்ச்செல்வி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள், சைல்டு லைன் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.