திருவாரூரில் மேலும் 129 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, நீடாமங்கலம் 39, திருவாரூா் 25, திருத்துறைப்பூண்டி 12 என மாவட்டம் முழுவதும் புதிதாக 129 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,538 ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை குணமடைந்த 81 பேரையும் சோ்த்து, இதுவரை 4,702 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். 771 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com