நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியன சாா்பில், ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

திருவாரூா்: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியன சாா்பில், ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், சட்டப் பேரவை முற்றுகை போராட்டத்தில் அடக்குமுறையை கையாண்ட போலீஸாரை கண்டித்தும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.பி.ஜோதிபாசு, மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் இரா.ஹரிசுா்ஜித் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் மாணவா் சங்க மாநில துணைச் செயலாளா் ஆறு.பிரகாஷ், மாவட்ட தலைவா் பா.ஆனந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com