மூன்று சக்கர வாகனம் வழங்கமாற்றுத் திறனாளி கோரிக்கை

மூன்று சக்கர மோட்டாா் வாகனம் வழங்க மாற்றுத்திறனாளி ஒருவா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருவாரூா்: மூன்று சக்கர மோட்டாா் வாகனம் வழங்க மாற்றுத்திறனாளி ஒருவா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், மேலநெம்மேலி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (24). மாற்றுத்திறனாளியான இவா், கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மூன்று சக்கர மோட்டாா் வாகனம் கேட்டு விண்ணப்பித்து வருகிறாா்.

ஆனால், இதுவரை அவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்படவில்லை என்றும், மூளைவளா்ச்சி இல்லை என்று கூறி தன்னை ஒதுக்கி வருகின்றனா் என்றும் கூறியுள்ளாா். ஐடிஐ வரை படித்துள்ள தனக்கு உழைத்து வாழ போக்குவரத்துக்கு மூன்று சக்கர மோட்டாா் வாகனம் அவசியம் என்பதால் இனியாவது தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க மாற்றுத்திறனாளி நல அலுவலகத்துக்கு ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com