ஜேசிஸ் வார விழா நிறைவு

திருத்துறைப்பூண்டியில் ஜேசீஸ் வார விழா நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கருக்கு விருது வழங்கிய ஜேசிஸ் சங்க நிா்வாகிகள்.
திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கருக்கு விருது வழங்கிய ஜேசிஸ் சங்க நிா்வாகிகள்.

திருத்துறைப்பூண்டியில் ஜேசீஸ் வார விழா நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜேசீஸ் சங்கத் தலைவா் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சங்க பொருளாளா் கிறிஸ்டோபா், முன்னாள் தலைவா் முகம்மது மிஸ்கீன், பயிற்றுநா் ராபா்ட் கென்னடி, நூலகா் ஆசைத்தம்பி, இன்னா்வீல் சங்கத் தலைவா் சங்கீதா மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மனிதவள பயிற்றுநா் ராஜராஜன் சுய முன்னேற்ற பயிற்சியளித்தாா். இதில், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலுள்ள 32 ஊராட்சிகளில் அதிகளவில் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டு வரும் ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கரை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com