தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், பிளஸ் 2 பொதுத்தோ்வு அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்,பெருமன்ற மாவட்டச் செயலாளா் சு. பாலசுப்ரமணியன், மாணவா், இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் வீரபாண்டியன், எம். நல்லசுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.