திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆதிரெங்கம் ஊராட்சித் தலைவா் வீரசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன் மரக்கன்றுகளை நட்டு, 1,300 குடும்பங்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினா் சரஸ்வதி, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், துணைத் தலைவா் எம். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில், 6 ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, கொக்கலாடி, விளக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.