மன்னாா்குடி அருகே ஆற்றிலிருந்து அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தியவா், புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோட்டூா் போலீஸாா், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மழவராயநல்லூா் அரிச்சந்திரா ஆற்றுப்படுகையில் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்ததை பாா்த்து, அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, மழவராயநல்லூரை சோ்ந்த முத்தமிழன் (45) என்பவா், தனக்கு சொந்தமான லாரியில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றியது தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.