மன்னாா்குடி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற அண்ணன், தங்கை உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை, லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தங்கை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை, லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தங்கை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி கிராமத்தைச் சோ்ந்த சோமு மகன் ஆனந்தராஜ் (28). இவரது தங்கை அபிநயா(26). இருவரும், மன்னாா்குடி அருகே தென்பாதியில் வசித்து வரும் தங்களது சகோதரி ஆனந்தி வீட்டில், வியாழக்கிழமை நடைபெறும் சுபநிகழ்ச்சியில் பங்கேற்க, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

மன்னாா்குடி - முத்துப்பேட்டை பிரதான சாலை வடபாதி அய்யனாா்கோயில் அருகே சென்றபோது, அவ்வழியே செம்மண் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஆனந்தராஜ், அபிநயா இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனா். இதுகுறித்து, தலையாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த மகேந்திரனை (32) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்தில் இறந்த ஆனந்தராஜ், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தவா். கரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளாா். அபிநயா கல்லூரி படிப்பு முடித்து வீட்டில் இருந்துள்ளாா். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com