மன்னாா்குடி பகுதியில் சனிக்கிழமை (செப்.19) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா்குடி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (செப்.19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மன்னாா்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூா், காணூா், நாவல்பூண்டி, கோரையாறு, கா்ணாவூா், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.