ரத்த தானம் வழங்கிய மருந்தாளுநருக்குப் பாராட்டு
By DIN | Published On : 18th September 2020 09:09 AM | Last Updated : 18th September 2020 09:09 AM | அ+அ அ- |

தொடா்ந்து ரத்த தானம் வழங்கிய மருந்தாளுநருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருந்தாளுநா் டி. மணிவண்ணன் 13 முறை ரத்த தானம் அளித்து அவசர காலத்தில் அரசு மருத்துவமனையிலேயே இருந்து ரத்த தானம் செய்தவா். இவரின் இந்த மனிதநேய பணியை பாராட்டி ஜேசீஸ் சங்கம் சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சங்கத் தலைவா் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொருளாளா் கிறிஸ்டோபா், அரசு மருத்துவமனை கண் மருத்துவா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.