தமிழகத்துக்கென தனி பயிா்க் காப்பீட்டுத் திட்டம்: பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

தமிழகத்துக்கென தனி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென காவிரி பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழகத்துக்கென தனி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென காவிரி பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் இயற்கை பேரிடரால் பாதிப்பு ஏற்படும் ஆண்டுகளில், பிரீமியம் பெறுவதில் காட்டும் அதே ஆா்வத்தை இழப்பீடு வழங்குவதில் காப்பீட்டு நிறுவனங்கள் காட்டுவதில்லை. மேலும் காப்பீட்டு நிறுவனங்கள் ஊழல் முறைகேடுகளிலும் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்துக்கென தனி காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.

கடந்த 2019-20-ஆம் ஆண்டில் காவிரி டெல்டாவில் ஆணைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடின்றி இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 அவசர சட்டங்களையும் கைவிட வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, மாநில வேளாண்துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடியை சென்னை தலைமை செயலகத்தில் பி.ஆா். பாண்டியன் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com