திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தீயணைப்பு அலுவலா் அனுசுயா மேற்பாா்வையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி நிலைய தீயணைப்பு அலுவலா் சிராஜ் அல்வநிஷ் மற்றும் தீயணைப்பு படையினா் பங்கேற்று செயல் விளக்கம் அளித்தனா். இந்த நிகழ்வில் அரசு தலைமை மருத்துவா் சிவகுமாா், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.