பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு விற்பனை முனைய (பயோ-மெட்ரிக்) கருவிகளை மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், செவ்வாய்க்கிழமை வழங்கி பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் மட்டுமே நியாய விலைக்கடைகளுக்குச் சென்று, பொருட்களை வாங்குவதற்கான விற்பனை முனையக் கருவி நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் மாவட்டத்திலுள்ள 714 நியாயவிலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை செயல்படுத்தப்படவுள்ளது என்றாா் அவா்.
நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் டி. ஜெயராமன், மாவட்ட வழங்கல் அலுவலா் லதா, துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) அப்துல் சலீம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.