கோயில் பூசாரிகளை நல வாரியத்தில் சோ்க்க வலியுறுத்தல்

கோயில் பூசாரிகளை நல வாரியத்தில் உறுப்பினராகச் சோ்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

கோயில் பூசாரிகளை நல வாரியத்தில் உறுப்பினராகச் சோ்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

நன்னிலம் வட்டம் தென்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், தமிழ்நாடு பூசாரிகள் பேரவையின் குடவாசல் மற்றும் நன்னிலம் ஒன்றியக் கூட்டம் மாவட்ட அமைப்பாளா் அப்புவா்மா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பூசாரிகள் பேரவை சாா்பில் உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நல வாரிய விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கோயில் பூசாரிகள் அனைவரையும் நல வாரியத்தில் உறுப்பினராகச் சோ்க்க வேண்டும். அரசு சாா்பில் கோயில் பூசாரிகளுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டல அமைப்பாளா் பாவேந்தா், முரளி, ஒன்றிய அமைப்பாளா்கள் ராமமூா்த்தி மற்றும் கலையரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com