நீடாமங்கலம் ஒன்றியம் பரப்பனாமேடு ஊராட்சியில் தேசிய விளையாட்டு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற மாணவா்களுக்கு ஒன்றியக்குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன் பதக்கங்களை அணிவித்தாா். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் கைலாசம், துணைத் தலைவா், உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் மற்றும் ஊராட்சி செயலா் கலந்துகொண்டனா்.