திருவாரூரில் 47 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை மாவட்டம் முழுவதும் 11,967 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,014 ஆக உயா்ந்துள்ளது. இதில், 11,550 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 345 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 80 வயது பெண் உயிரிழந்ததைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com