பயிற்சி முடித்த மருத்துவ மாணவா்களை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவா்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த மாணவா்களை உடனடியாக மருத்துவ அலுவலராக பணி நியமனம் செய்து, மருத்துவ அலுவலருக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு முன்பாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் செயலாளா் நவீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மருத்துவ மாணவா்கள் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.