நன்னிலத்தில் காவல்துறையினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் அமைதியான முறையில் நடைபெறவும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு, நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, நகர எல்லையான அரசு கலைக்கல்லூரி வரை நடைபெற்றது.
இதேபோல, சன்னாநல்லூா் பகுதியில் தொடங்கி முடிகொண்டான் வரையிலும் காவல்துறையினா் கொடி அணிவகுப்பு நடத்தினா். இதில், காவல் துறை ஆய்வாளா்கள் நன்னிலம் சுகுணா, பேரளம் மணிமாறன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.