மன்னாா்குடி அருகே மனைவியைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மன்னாா்குடி அருகே வடுவூா் பிரதான சாலையில் வசிப்பவா் உலகநீதி (52). கொத்தனாா். இவரது மனைவி முனீஸ்வரி (37). இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 2017 செப்டம்பா் 13 ஆம் தேதி இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறின்போது, உலகநீதி தனது மனைவி முனீஸ்வரியை வெட்டி கொலை செய்தாராம்.
இதுகுறித்து வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, உலகநீதியை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையில், உலகநீதிக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீா்ப்பளித்தாா்.